
ரத்து செய்யப்பட்ட குரூப் 2-க்கான மறு தேர்வு நவம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பபில் கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆக.12-ம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற்ற தொகுதி II (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் - I) உள்ளிட்ட இதரப் பணிகளின் நேரடித் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இதற்கான மறு தேர்வு நவம்பர் 4-ம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்படும்.
ஏற்கெனவே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த மறு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
ஆக.12-ம் தேதி தேர்வுக்கு வருகை புரியாதோரும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.
விண்ணப்பத்தாரர்கள் இதற்கென தேர்வு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு எழுதி வேண்டிய தேர்வுக் கூடம் குறித்த விவரங்கள் தேர்வாணையம், மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து விரைவில் வெளியிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆக.12-ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். வினாத்தாள் வெளியான விவகாரத்தால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
No comments:
Post a Comment